Header Ads

பணத்திற்காக விலை போகாதீங்க பாஸ்: ஜெயம்ரவி தேர்தல் பிரச்சாரம்..

அரசியல்கட்சிகளுக்கு நடிகர் நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக சிந்தனையோடு வாக்காளர்களிடம் தேர்தல் வழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், கண்காட்சியையும் துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்களிப்பது நமது கடமை. ஒவ்வொரு முறையும் நாம் வாக்களிக்கும்போதும் நமது ஜனநாயக கடைமையை நிறைவேற்றுகிறோம் என்று பெருமை பட்டுக் கொள்ள வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை. அந்த உரிமையை பணத்துக்காக யாரிடமும் விட்டுத் தரக்கூடாது. நல்வர்களை கண்டுகொண்டு நமது மனசாட்சிப்படி அவர்களை தேர்வு செய்ய வேண்டும். இதை நடிகர் என்ற முறையில் அல்ல. நானும் ஒரு வாக்களாள், இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயம்ர

No comments:

Powered by Blogger.