Header Ads

கவுதம் மேனன் படம் டிராப்: சிம்பு ஷாக் -

சென்னை: டைரக்டர் கவுதம் மேனன் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்தார் சிம்பு. இப்படத்தையடுத்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை என்ற படத்தில் சிம்பு நடிப்பதாக 2 மாதத்துக்கு முன்பு தகவல் வெளியானது. இதற்கிடையில் சூர்யா படத்தை இயக்க எண்ணிய கவுதம் மேனன் அவரை சந்தித்து கதை சொன்னார். அது அவருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அப்படம் டிராப் ஆனது. எனவே, சிம்பு நடிக்கும் படத்தை தொடங்கினார். 

சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் அதன் ஷூட்டிங்கை நிறுத்திய கவுதம் மேனன் அஜீத் நடிக்கும் புதிய படத்தை  இயக்குவதில் தீவிரம் காட்டினார். இதையடுத்து சிம்புவுடனான கவுதம் மேனனின் படம் டிராப் ஆகிவிட்டதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. இதுகுறித்து சிம்பு கூறும்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டோம். 

ஆனால், அஜீத் படத்தில் கவுதம் மேனன் பிஸியாக இருப்பதால் இதன் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்திருக்கிறோம். விரைவில் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார். 

No comments:

Powered by Blogger.