12 வயது மகளின் கன்னித்தன்மையை விற்ற தாய் கம்போடியா இரவு வாழ்க்கை குறித்து அதிர்ச்சி தகவல்
கம்போடியா நாட்டின் இரவு வாழ்க்கை குறித்த கொடூர விசயங்களை வெளிப்படுத்தும் விதமாக அந்நாட்டின் சிறுமி அளித்த தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடனாளி தந்தை
கம்போடியாவின் நாம்பென் நகரில் வசித்து வரும் சிறுமி டாரா கியோ (வயது 17). இவரது தாய் ரோடன்னா (வயது 62). கியோவிற்கு வயது 12ஐ நெருங்கும்போது, ரோடன்னாவின் வாழ்க்கையில் புயல் கிளம்பியது. அவரது கணவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய அதிகளவில் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், கடனை அடைக்கும் முன் கணவர் இறந்து விட்டதால் கடன் கொடுத்தவர்கள் மிரட்ட தொடங்கினர். இதனால் அடுத்து செய்வது குறித்து திகைத்த ரோடன்னா பணம் சம்பாதிப்பதற்கு மாற்று வழியில் ஈடுபடலானார். ஒரு நாளைக்கு ஒரு டாலர் பணம் சம்பாதித்து வந்த ரோடன்னா கடனை அடைக்க முடியாமல் திணறினார். இறுதியாக அவர் எடுத்த முடிவு தான் சிறுமியின் கன்னித்தன்மையை விற்பது ஆகும்.
அந்நாட்டில், அரசு துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், ராணுவத்தினர், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பண வசதி படைத்தவர்கள் ஆகியோரிடம் ஒரு பழக்கம் உள்ளது. அதாவது, அவர்கள் தங்கள் செக்ஸ் இச்சையை தீர்த்து கொள்வதற்கு இளைய வயது உடைய கன்னித்தன்மை இழக்காத சிறுமிகளையே தேர்வு செய்வது வழக்கம்.
டாவோயிஸ்டு கலாசாரம்
இதனால் ஆயுள் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளதாக அந்நாட்டின் டாவோயிஸ்டு கலாசாரத்தை உதாரணம் கூறுகின்றனர் சிலர். 12 வயதில் கியோ ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளாள். உடனே, அவள் டாக்டரிடம் அழைத்து செல்லப்பட்டு உள்ளாள். அந்த டாக்டர் இதற்காகவே பணம் வாங்கி கொண்டு தொழில் நடத்துபவர். அவர், சிறுமி கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா? என்பதை அறியும் சோதனையை மேற்கொண்டுள்ளார்.
அதன் பின்பு சிறுமிக்கு எவ்வித வியாதியும் இல்லை. சிறுமி கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று சான்று அளித்து உள்ளார். அந்நாட்டில் பெண்களை செக்சிற்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் கன்னித்தன்மையை இழந்த பெண்களை மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கன்னித்தன்மை உடைய பெண்களாக குணமடைய செய்து பல முறை அவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.
கியோ மருத்துவ சோதனைக்கு பின்பு அவளை விலைக்கு வாங்கியவருடன் சென்றுள்ளாள். அவருடன் ஒரு வாரம் தங்கி இருந்துள்ளாள். ஒரு நாளைக்கு இரண்டு சில சமயங்களில் மூன்று முறை என தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரும் அவர் விரும்பியபோதெல்லாம் கற்பழித்தார் என்று கூறிய கியோ, அவர் மிக கடினமாக நடந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஏற்பட்ட வலி வாரக்கணக்கில் தொடர்ந்ததாக கியோ கூறுகிறாள்.
அந்த சம்பவம் முடிந்து ஒரு வாரம் ஆன பின்னர் அழுகையோடும், வருத்தத்தோடும் விடப்பட்டாள் கியோ. நடப்பதற்கு கூட சிரமமாக இருப்பதை கியோ உணர்ந்ததுடன், இரு வாரங்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கும் கஷ்டப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளாள். இந்த சம்பவத்திற்கு பின்னர் தன்னை விலைக்கு வாங்கிய கம்போடிய அரசியலில் முக்கிய புள்ளியாக விளங்கும் அந்நபரை குறித்து எதனையும் கூற கியோ மற்றும் அவளது தாய் ரோடன்னா ஆகியோர் மறுத்து உள்ளனர்.
No comments: