Header Ads

மாயமான விமானத்தின் கடைசி வாசகம் என்ன? மலேசியா புதிய அறிவிப்பு

229 பயணிகளுடன், சீன தலை நகர் பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த மாதம் 8ந் தேதி மாயமானது. அந்த விமானத்தில் இருந்து துணை விமானி கடைசியாக, "ஆல் ரைட் குட்நைட்" என்று பேசியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தில் இருந்து கடைசியாக " குட்நைட் மலேசியன் 370 " என்ற வாசகம் கேட்டதாகவும் இதை யார் பேசியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியா  அறிவித்தது. இதற்கிடையே, அந்த விமானத்தில் சென்றவர்களின் உறவினர்கள், மலேசியா அரசு இன்னும் சரியான தகவல்களை தராமல் மறைக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.  மலேசிய விமானத்தை தேடும் முயற்சியும் தொடர்ந்து நடக்கிறது.

No comments:

Powered by Blogger.