Header Ads

மெக்சிகோவில் பேஸ்புக் விவகாரத்தில் தோழியை 65 முறை குத்தி கொலை செய்த 16 வயது சிறுமி கைது

மெக்சிகோ நாட்டில் 16 வயது சிறுமி தனது சக தோழியை பேஸ்புக் விவகாரத்தில் 66க்கும் அதிகமாக கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

பேஸ்புக்கில் புகைப்படம்

எராண்டி எலிசபெத் கடியெரஜ் மற்றும் ஆனெல் பேயஸ் ஆகியோர் 16 வயது கொண்ட தோழிகள் ஆவர்.  இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.  ஆனால், இருவரும் சேர்ந்து நிர்வாண நிலையில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பேயஸ் வெளியிட்டதால் கடியெரஜ் ஆத்திரமடைந்தார்.

உன்னை இந்த வருட இறுதிக்குள் புதைத்து விடுவேன் என்றும் பேயசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.  நான் அமைதியாக இருப்பது போன்று தெரியும்.  ஆனால் எனது நினைவில் உன்னை குறைந்தது 3 முறை கொன்றிருப்பேன் என்று டுவிட்டர் வலைதளம் வழியே பேயசுக்கு தெரிவித்துள்ளார் கடியெரஜ்.  அத்தகவல் தற்பொழுது அழிக்கப்பட்டு விட்டது.

உனது அதிர்ஷ்டம்

ஆனால், இந்த வருடம் வரை உயிரோடிருந்தால் அது உனது அதிர்ஷ்டம் என்று பேயசிடம் கூறியிருந்தாலும், அது குறித்து பேயஸ் சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை.  அதன் பின்பு பேயஸ் கடந்த மார்ச் 19-ந்தேதி கடியெரஜை தொடர்பு கொண்டு மெக்சிகோ நகரின் குவாமுசில் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.

அங்கு சென்ற பின் பேயசிடம் அவளது குளியலறையை பயன்படுத்தி கொள்ள அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்ற கடியெரஜ் சமையலறைக்கு சென்று அங்குள்ள கத்தியை எடுத்து திரும்பி வந்துள்ளாள்.  முன்னாள் தோழியான  பேயசை அவளது பின்புறத்தில் 65 முறைக்கும் மேல் கத்தியால் குத்தியுள்ளாள் கடியெரஜ்.

அதிகபட்ச தண்டனை

இந்த சம்பவத்திற்கு பின்பு அங்கிருந்து தப்பி சென்ற கடியெரஜ் தனக்கும் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல் காட்டி கொள்ளும் முயற்சியில் அடுத்து இறங்கியுள்ளாள்.  நண்பர்களுடன் சேர்ந்து அழுதுள்ளாள்.  இறுதி சடங்கிலும் பங்கேற்றுள்ளாள் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடைசியில் கடியெரஜ் கைது செய்யப்பட்டு உள்ளாள்.  கொலை செய்த குற்றத்திற்காக அவள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.  மெக்சிகோ நாட்டில் குற்றம் செய்த 18 வயதிற்குட்பட்டோருக்கு அதிக அளவாக 7 வருடங்கள் வரையே தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.