Header Ads

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மிக சவாலானது: தேடுதல் பணி குழு தலைவர் அறிவிப்பு

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது குறித்து ஜே.ஏ.சி.சி. எனப்படும் இணை கழக ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை அதிகாரியான ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில், மலேசிய விமானம் எம்.எச்.370வை தேடுவது மிக சிக்கலான மற்றும் சவாலான பணியாக உள்ளது.

அதனை தேடுவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.  அதனுடன், இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் தேடுதல் பணியில் போயிங் 737 ரக நவீன விமானம் ஒன்றும் ஈடுபடும் என்றும் அது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.