Header Ads

அஞ்சலிக்கு மீண்டும் செக் வைத்துள்ளார் டைரக்டர் களஞ்சியம்!

தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் மு.களஞ்சியமும் தனது வருமானத்தை அபகரித்துக்கொள்வதாக புகார் கூறிக்கொண்டு சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. அதன்காரணமாக, மு.களஞ்சியத்தின் இயக்கத்தில் அஞ்சலி நடித்து வந்த ஊர் சுற்றி புராணம் என்ற படம் இழுபறியில் நின்றது. அதனால், தனது படத்தை அஞ்சலி முடித்து தர வேண்டும் என்று அழைப்பு விடுத்த களஞ்சியம், தயாரிப்பாளர் சங்கம் உள்பட அனைத்து சினிமா சங்கங்களிலும் அவர் மீது புகார் அளித்தார். ஆனபோதும், எந்த பேச்சுவார்த்தைக்கும் அஞ்சலி உடன்படவில்லை.

அதோடு, தன் படத்தில் சொன்னபடி நடித்து தராத அஞ்சலிக்கு யாரும் ஆதரவு கொடுக்காதீகள் என்று அவருக்கு சான்ஸ் கொடுத்த ஆந்திர படாதிபதிகளையும் கேட்டுக்கொண்டார் களஞ்சியம். ஆனால் அஞசலியைப்போலவே அதை மற்றவர்களும் அலட்சியம் செய்து விட்டனர். இதனால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் அஞ்சலி.

அதனால் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது வரை இழுபறியில் நின்று கொண்டிருக்கிறது களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம். இந்த நிலையில, சேட்டை படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த அஞ்சலி, தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, ஏற்கனவே தான் அஞ்சலி மீது புகார் அளித்திருந்ததை நினைவுபடுத்தும் வகையில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என்ற அனைத்து சங்கங்களுக்கும் மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக கடிதம் அனுப்பியுள்ளார் களஞ்சியம். அதோடு, ஏற்கனவே கமிட்டாகி பத்து நாட்கள் மட்டுமே நடித்துள்ள என் படத்தை அஞ்சலி முடித்து தந்த பிறகுதான் அவரை வேறு படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மு.களஞ்சியத்தின் கோரிக்கையை மற்றவர்கள் ஏற்பார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

No comments:

Powered by Blogger.