என்னை இராணுவத்தினர் கற்பழிப்பார்கள்: கதறி அழும் பெண் BBC கொடுத்த சாட்சியம் !

இதேவேளை ஆண் ஒருவர் தனது சாட்சியத்தையும் இங்கே பதிவுசெய்துள்ளார். தன்னை சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவம் கைதுசெய்தது என்றும், தன்னை சொல்லொனா சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தன்னை சிறையில் வைத்து விசாரிக்கும்போது ஒவ்வொரு கேள்விகளைக் கேட்க்கும்போதும், தனது ஆண் குறியை இலங்கை இராணுவம் கசக்கி தன்னை துண்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே தமது முகத்தை காட்ட மறுத்துவிட்டபோதும், BBC இதனை ஆவணப்படுத்தியுள்ளது. இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள இன் நிலையில், பல ஆதாரங்கள் இலங்கைக்கு எதிராக வெளியாகியவண்ணம் உள்ளது. இது இலங்கை அரசின் மேல் பல அழுத்தங்களை பிரியோகித்தவண்ணம் உள்ளது.
No comments: