Header Ads

மகளை விட வயது குறைந்தவரை திருமணம் செய்யும் நீங்கள் எங்கள் திருமணத்தை எதிர்த்தது ஏன்? திக்விஜய் சிங்கிற்கு சகோதரர் மனைவி கேள்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் (67). இவர் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி  ஆவார்.  இவரது மனைவி ஆஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு   புற்று நோயால் மரணம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் இவருக்கும், ராஜ்யசபா டி.வி.யில் அறிவிப்பாளராக  இருந்த அமிர்தாராய்க்கும் இடையே காதல் மலர்ந்தது.   43 வயதாகும் அமிர்தாராய்க்கு ஏற்கனவே   திருமணம் ஆகிவிட்டது. கணவரை பிரிந்து  வாழ்கிறார். மேலும் அவரை விவாகரத்து செய்து விட்டு  திக்விஜய்சிங்கை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அமிர்தா ராயும், திக்விஜய்சிங்கும் கட்டி அணைத்தபடி நெருக்கமாக  இருக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் இன்டர் நெட் டில் வெளியாகின.இது குறித்து அமிர்தா ராய் போலீசில் புகார் செய்தார்

இதற்கிடையே திக்விஜய் சிங்& அமர்தாராய் சம்பந் தப்பட்ட  ஆபாச வீடியோ மற்றும் புகைப்படக் காட்சி களை முடக்கும்படி டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற இணைய தளங்களுக்கு போலீஸ் தரப்பிலும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திக்விஜய்சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங். இவரது மனைவி ருபினா சர்மா சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் "தனது தம்பியைவிட நான் 30 வயது இளையவள் என்பதால் எங்கள் திருமணத்தை எதிர்த்தவர்தான் திக்விஜய்சிங். நான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவள் இல்லை என்பதையும் அவர் எதிர்ப்புக்கு காரணமாக சொன்னார். ஆனால் இப்போது அவரது செயல் விந்தையாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ருபினா சர்மா சிங்கிடம் நிருபர்கள் கேட்டதற்கு, லட்சுமண் சிங்கின் முதல் மனைவி ஜக்ரிதி இறந்ததும் 2002-ல் நான் லட்சுமண் சிங்கை திருமணம் செய்தேன். அப்போது இதே திக்விஜய் சிங்தான், 30 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்ய கூடாது என்றும், நான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவள் இல்லை என்றும் கூறினார்.

லட்சுமண் சிங் முதல் மனைவிக்கு பிறந்த மகள் என்னைவிட 13 வயது இளையவர். ஆனால் எங்கள் திருமணத்துக்கு அவர் கூட எதிர்ப்பு தெரிவித்தார். திக்விஜய் சிங் திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கோ, அவரின் மகள்களைவிட வயது குறைவு என்று கூறி உள்ளார்.

No comments:

Powered by Blogger.