இதப்படிங்க முதல்ல...
நாவலை படமாக்கும் விஷ்ணுவர்தன்!
அஜீத் நடிப்பில், ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், அடுத்தபடியாக, விஜய்க்கு கதை சொல்ல முயற்சி எடுத்தார். ஆனால், 'இப்போதைக்கு புதிய கதை கேட்கும் மூடில் இல்லை...' என்று, விஜய் கூறி விட்டதால், ஆர்யா - கிருஷ்ணாவை இணைத்து, யாட்சன் என்றொரு படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் சுபாவின், யாட்சன் என்ற நாவலை, மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில், நான் கடவுள் படத்தில் நடித்தது போன்று, ஒரு மாறுபட்ட கெட்டப்பில் நடிக்கிறார் ஆர்யா.
— சினிமா பொன்னையா.
வசனகர்த்தாவான விஜயசேதுபதி!
சங்கு தேவன் படத்தை, முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து நடித்து வந்த விஜயசேதுபதி, பைனான்ஸ் பிரச்னை காரணமாக, அப் படத்தை கிடப்பில் போட்டு விட்டார். ஆனால், இப்போது, மெல்லிசை என்ற படத்தை, தானே தயாரித்து, நடிக்கிறார். இந்த படத்தின், கதை விவாதம் நடைபெற்றபோது, தன் சார்பில், பல டயலாக்குகளை ஆர்வத்துடன் இணைத்தார் விஜய சேதுபதி. அதைப் பார்த்த பட டைரக்டர், டயலாக் எழுதும் பொறுப்பை, இப்போது விஜய சேதுபதியிடமே கொடுத்து விட்டார். ஆக, மெல்லிசை படத்தில் தயாரிப்பாளர், வசனகர்த்தா என்ற இரண்டு பொறுப்புகளை, கூடுதலாக பெற்றுள்ளார் விஜயசேதுபதி.
— சி.பொ.,
தமிழில் பிசியாகும் சமந்தா!
தெலுங்கில், கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கும் சமந்தாவின் கவனம், தற்போது, கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. அதனால், கத்தி, அஞ்சான் படங்களில் நடித்து வரும் அவர், தீவிரமாக கதை கேட்டு வருகிறார். அந்த வகையில், விஜய் மில்டன் சொன்ன கதை பிடித்து, அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அப்படத்தில், விக்ரம் நாயகனாக நடிக்கிறார். வந்த வேகத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களை கைப்பற்றியுள்ள சமந்தா, மேலும், சில மெகா நடிகர்களின் படங்களுக்கு, குறி வைத்து வருகிறார்.அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா
நீச்சல் உடை நடிகையாகும் இலியானா!
நண்பன் படத்தில், விஜய் யுடன் நடித்த இலியானா, அதன் பின், எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால், கோலிவுட் படாதிபதிகள், அவரை ஓரங்கட்டினர். அதனால், பாலிவுட்டுக்கு சென்று, சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்களின் தோல்வி காரணமாக, இப்போது, அங்கு படங்கள் இல்லை. அதனால், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க, சான்ஸ் கேட்கும் இலியானா, நீச்சல் உடையில் நடிக்கவும், தயாராக இருப்பதாக, டைரக்டர்களுக்கு ரகசிய தகவல் விட்டுள்ளார். கூத்துக்குப் புகுந்தவன் கொட்டுக்கு அஞ்சித் தீருமா?
— எலீசா
எம்.ஜி.ஆர்., டைட்டிலுக்கு பயந்த விஜய்!
விஜய்யை வைத்து, நினைத்தேன் வந்தாய், ப்ரிபிரியமுடன் மற்றும் வசீகரா ஆகிய படங்களை இயக்கியவர் செல்வபாரதி. அவர், மீண்டும் விஜய்க்காக ஒரு கதை தயார் செய்துள்ளார். அதற்கு, எம்.ஜி.ஆரின் பட டைட்டிலான, எங்க வீட்டு பிள்ளை பெயரை சூட்டினார். ஆனால், கதை கேட்டு ஓ.கே., சொன்ன விஜய், 'இந்த டைடடிலை வைக்க வேண்டாம்...' என்று, கூறி விட்டார். காரணம் கேட்டபோது, 'ஏற்கனவே, வேட்டைக்காரன் பட டைட்டிலில் நடித்தபோது, எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இப்போது ஆளுங்கட்சியும் என் மீது அதிருப்தியில் உள்ளது. அதனால், இந்த நேரத்தில், எம். ஜி.ஆர்., பட தலைப்பில் நடித்தால், அதை வைத்தே பிரச்னையை பெரிதாக்கி, படத்தை முடக்கி விடுவர்...' என்று நிலைமையை சொல்லி, வேறு டைட்டிலை யோசிக்குமாறு கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா.
கறுப்பு பூனை!
ஓரெழுத்து படத்தில் நடித்து வந்தபோது, சீயான் நடிகருடன் ஐக்கியமாகி விட்டார் அந்த ஹாலிவுட் நடிகை. இதனால், படப்பிடிப்பு முடிந்த பின், லண்டன் செல்லாமல், சென்னையிலே, டேரா போட்டிருந்த அம்மணிக்கு, சமீபத்தில், ஒரு மெகா பார்ட்டி கொடுத்து, ப்ளைட்டில் ஏற்றி, விடை கொடுத்துள்ளார் சீயான்.
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வீடே கதியென்று கிடக்கும் முத்தழகு நடிகை, எந்நேரமும் மதுபானமும், கையுமாக காட்சி கொடுத்தார். விளைவு, அவரை புக் செய்ய சென்ற படாதிபதிகள், அம்மணி உருண்டு, திரண்டு ஆன்ட்டியாகி விட்டதை கண்டு, விழுந்தடித்து ஓடுகின்றனர். ஆக, அந்த துக்கத்தில், இப்போது இன்னும் இரண்டு ரவுண்டு அதிகமாக உள்ளே தள்ளுகிறார் முத்தழகு.
துளிகள்
* தன் அண்ணனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதால், எந்நேரமும் அதை கொஞ்சிய படியே பொழுதை கழித்து வருகிறார் ப்ரியாமணி.
* ஐ படத்தில் நடித்த பின், தன் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தியுள்ளார் விக்ரம்.
* வாலு படப்பிடிப்பில் ஹன்சிகா கலந்து கொள்ள மறுப்பதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
No comments: