Header Ads

போக்குவரத்து தனியார் மயம் ஊழியர்கள் அதிர்ச்சி



சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ. 1000 கோடி  நஷ்டத்தை சந்தித்துள்ளதால், பஸ் டெப்போ உள்பட ஒரு சில  துறைகளை தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு செய்ய அரசு  ஆலோசித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியும், 2012ம் ஆண்டில் ரூ. 750  கோடியும், 2013ம் ஆண்டில் ரூ. 850 கோடியும், 2014ல் ரூ. 1000  கோடியும் நஷ்டமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.   இந்நிலையில்,  நஷ்டத்தை சமாளிக்கும் பொருட்டு, பேருந்து நிலையம், பயணச்சீட்டு  பிரிவு, டிக்கெட் மெஷின், பணிமனை உள்ளிட்டவற்றை மாவட்ட  வாரியாக தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு செய்ய  உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

No comments:

Powered by Blogger.