Header Ads

அஜீத்தின் மெனக்கெடல் அதிகமாக உள்ளது! -கெளதம்மேனன்

அஜீத்தின் 55வது படத்தை இயக்கி வரும் கெளதம்மேனன், அப்படத்தை தொடங்குவதற்கு முன்பு, மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களில் நடித்த அஜீத்தை என் படத்தில் பார்க்க முடியாது. முற்றிலும் மாறுபட்ட இளமையான அஜீத்தைக் காண்பிக்கப்போகிறேன் என்று கூறினார். ஆனால், இப்போதோ முந்தைய படங்களில் நடித்த அதே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில்தான் இப்போதும் அஜீத் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதுபற்றி கெளதம்மேனனைக்கேட்டால், இந்த ரோல் போலீஸ் அதிகாரி கெட்டப். அதனால் அப்படித்தான் அவர் இருக்க வேண்டும். ஆனால், ஒரு இளமையான கெட்டப்பும் உள்ளது. அது இதே அஜீத்தானா? இல்லை இன்னொரு அஜீத்தா? என்பதை இப்போதே என்னால் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் படத்திலுள்ள சுவராஸ்யம் போய்விடும் என்கிறார்.

அதோடு இந்த படத்தில் ரொம்ப வெயிட்டான ரோலில் நடிக்கிறார் அஜீத். இதுவரை அவர் நடித்த கதைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட அதேசமயம், அவர் சீன் பை சீன் வித்தியாசமான பர்பாமென்ஸை காட்டி நடிக்கக்கூடிய வேடம். அதனால் பெரும்பாலும் சில காட்சிகளை ஹோம் ஒர்க் செய்து விட்டு ஸ்பாட்டுக்கு வருகிறார். மேலும், சமீபகாலமாக அஜீத் ரசிகர்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதனால் இந்த படத்தில் அஜீத்தின் மெனக்கெடல் ரொம்பவே அதிகமாக உள்ளது என்கிறார்.

No comments:

Powered by Blogger.