தேசிய கொடியை அணிந்து கவர்ச்சி போஸ் நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய ஆர்எஸ்எஸ் போராட்டம்
மும்பை: தேசிய கொடியை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத்தை கைது செய்யவேண்டும் என்று போராட்டம் வலுத்துள்ளது. தசாவதாரம் படத்தில் கமலுடன் நடித்தவர் நடிகை மல்லிகா ஷெராவத். இந்தி படவுலகத்தின் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் மல்லிகா ஷெராவத் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கே.சி.பொகாடியா இயக்கியுள்ள இப்படத்தில் தேசிய கொடி நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து கார் ஒன்றின் மீது படுகவர்ச்சியாக உட்கார்ந்திருக்கும் மல்லிகா ஷெராவத், கையில் சிடி ஒன்றை வைத்துள்ளார். பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தின் போட்டோ உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் அரசியல்வாதிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் எடுத்து மிரட்டி வந்த பன்வாரிதேவி என்ற நர்ஸின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கொடி நிறத்தில் உடை அணிந்து அதை அவமானப்படுத்தியதுடன். ராஜஸ்தான் சட்டமன்றத்தையும் அவமானப்படுத்தும் வகையில் மல்லிகா நடந்துகொண்டுள்ளார் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மல்லிகாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
No comments: