Header Ads

என்னைத் தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா - மனம் திறந்த விஜய்!

எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கி இசையமைக்கும் படம் 'இசை'. இது இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கதையும் கூட.எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி நடித்துள்ளனர். எஸ்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பையா தயாரித்துள்ளார். 

'இசை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா குறித்து விஜய் பேசினார்.

" 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை எனக்கு இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற  கேள்வி இருந்தது.

அந்த நேரத்தில் 'குஷி' என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா சார். இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன்.



'குஷி' ரிலீஸ் ஆனவுடன் விக்ரமன் சார் கேட்டார் எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள்? கதையே இல்லையே? என்றார்.

நான் சொன்னேன் சரிதான். ஆனால் எஸ்.ஜே..சூர்யா என்று ஒருவர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார்.

'நண்பன்' சமயம் 'இசை'படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துகள்."என்று மனம் திறந்து பேசினார் விஜய். 

No comments:

Powered by Blogger.