Header Ads

மும்பையில் வீடு கிடைக்காமல் தவிக்கும் பிரபுதேவா

நடிகர் பிரபு தேவா மும்பையில் புதிய வீட்டில் குடியேறுகிறார். போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் படங்களை இயக்கி வருகிறார். இதற்காக மும்பையிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அந்தேரி பகுதியில் உள்ள ஸ்ரீதேவிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்து ஷூட்டிங் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது பங்களாவில் திடீரென்று தீபிடித்ததால் குடும்பத்தினருடன் வெளியேறி உறவினர் வீட்டில் தங்கினார் ஸ்ரீதேவி. 

பிறகு புத்தாண்டையொட்டி குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்று ஜாலியாக பொழுதை கழித்தார். இதை கேள்விப்பட்ட பிரபுதேவா, அந்தேரியில் தான் வாடகைக்கு வசித்துவந்த வீட்டை ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார். அந்தேரி அல்லது ஜுஹு பகுதியில் புதிதாக வீடு தேடி வந்த பிரபுதேவாவுக்கு எதிர்பார்த்த வசதிகளுடன் வீடு கிடைக்காததால் சென்னைக்கும், மைசூருக்கும் விமானத்தில் பறந்துகொண்டிருப்பதுடன் அங்குள்ள தனது வீட்டில் தங்கி பொழுதை கழிக்கிறார். இதற்கிடையில் பிரபுதேவாவின் நண்பர்கள் அவருக்கு மும்பையில் வீடு பார்த்திருக்கின்றனர். இன்று மும்பை திரும்பும் பிரபு தேவா புதிய வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளார்.

No comments:

Powered by Blogger.