Header Ads

வில்லனாக நடிக்கும் பார்த்திபன்

ஹீரோவாகதான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த பார்த்திபன் தாதா வேடத்துக்கு மாறினார். கோலிவுட்டில் சீனியர் ஹீரோக்கள் பிரபு, சத்யராஜ், பார்த்திபன், ராம்கி போன்றவர்கள் இளம் ஹீரோக்களின் வரவால் போட்டி அதிகரித்ததையடுத்து தங்கள் நடிப்பு பாணியை மாற்றி கொண்டிருக்கின்றனர்.  குணசித்ரம், வில்லன் வேடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து அவர்களின் மார்க்கெட் எல்லையும் விரிவடைந்திருக்கிறது. சம்பளமும் கணிசமாக கூடி இருக்கிறது. நண்பன் படம் மூலம் ஸ்டிரிக்ட்டான புரபஸர் வேடத்தில் நடித்த சத்யராஜ் தொடர்ந்து தலைவா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் தாதா வேடத்தில் நடித்தார். இதுதவிர இந்தியில் ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும் நடித்தார். தற்போது தெலுங்கில் ராஜ்மவுலி இயக்கும் பாஹுபாலி என்ற படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். அதேபோல் பிரபுவும் குணசித்ர வேடங்களில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கிறார். 

பிரியாணி படம் மூலம் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ரீ என்ட்ரி ஆனார் ராம்கி. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த பார்த்திபன் குணசித்ர வேடங்களில் நடிக்க வந்த பல வாய்ப்புகளை இழந்தார். தற்போது தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு வருமானத்தை பெருக்க முடிவு செய்திருக்கிறார். மாஜி ஹீரோக்களின் டெக்னிக்கை இவரும் கையில் எடுத்திருக்கிறார்.

பேரரசு இயக்கும் திகார் படம் தமிழ், மலையாளம் இருமொழிகளில் உருவாகிறது. இதில் ஹீரோவாக உன்னி முகுந்தன் நடிக்கிறார். அகன்ஷாபுரி, கிருதிபாபட் ஹீரோயின்கள். இப்படத்தில் அலெக்ஸ்சான்டர் என்ற தாதா வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். சமீபத்தில் பார்த்திபன் மும்பை வில்லன் ஜியாத்துடன் மோதிய காட்சி படமானது.

No comments:

Powered by Blogger.