Header Ads

ஏ.எம். ரத்னத்தை முற்றுகையிடும் பிரபல ஹீரோக்கள்!

தமிழில் இந்தியன், குஷி, ரன், பாய்ஸ், கில்லி , சிவகாசி என ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம், கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களை வைத்து தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஏ.எம்.ரத்னம், ஒரு கட்டத்தில் தனது மகன்களான ஜோதி கிருஷ்ணா, ரவி கிருஷ்ணா ஆகியோரையும் களத்தில் இறங்கி விட்டார்.

ஆனால் ஜோதி கிருஷ்ணா இயக்கிய கேடி மற்றும் விக்ரம் நடித்த பீமா உள்பட சில படங்கள் தோல்வியடைந்ததால், பெரும் சரிவை சந்தித்தார் ஏ.எம்.ரத்னம். அதனால் அடுத்து அவரால் எழும்ப முடியவில்லை. இந்த நிலையில், அவரது இயக்கத்தில் நடித்த எந்த ஹீரோக்களும் அவருக்கு கைகொடுக்காதபோது, அதற்கு முன்பு அவரது தயாரிப்பில் நடித்திராத அஜீத் முன்வந்து ஆரம்பம் படம் முலம் அவரை கைதூக்கி விட்டார்.

அந்த படம் ஓரளவு ஹிட் கொடுக்கவே தான் பட்ட கடன்களை அடைத்த ஏ.எம்.ரத்னம், தற்போது மீண்டும் அஜீத் நடிக்கும் 55வது படம் மூலம் அடுத்தடுத்து மெகா பட்ஜெட் படங்களை தயாரிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். அதனால் இதுவரை அவரை கண்டுகொளளால் இருந்த மேலும் சில முன்னணி ஹீரோக்களும் அவரது படங்களில் நடிக்க முற்றுகையிட்டு வருகிறார்கள்.

ஓடுற குதிரையில்தான் சினிமாவில் சவாரி செய்வார்கள் என்பதால், கடந்த காலத்தை எதையும் மனதில் கொள்ளாமல் மார்க்கெட்டில் நல்ல நிலையில் இருக்கும் ஹீரோக்களாகப்பார்த்து அடுத்தடுத்து படம் தயாரிக்க, தயாராகி வருகிறார் ஏ.எம்.ரத்னம்.

No comments:

Powered by Blogger.