குடிபோதையில் எஸ்.ஐ.யுடன் வந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் தர்ம அடி
புதுடெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக காவல்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது காவல்துறையை சேர்ந்த பெண் அதிகாரியே கடுமையாக தாக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளாது.
நேற்று டெல்லி பெண் இன்ஸ்பெக்டர் அனு தனது காரில் 10 மணிக்கு மார்க்கெட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். குடித்துவிட்டு கடும் போதையில் தனது வீட்டுக்கு வெள்ளை நிற காரில் சென்றுள்ளார். உடன் எஸ்.ஐ. லட்சுமணனும் வந்துள்ளார். அவர்கள வந்த காரை 4 பயணிகள் வந்த எர்திகா கார் வேகமாக முந்தி சென்றது. உடனே அவர்களை அந்த பெண் அதிகாரி முந்தி செல்ல முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. முன்னே சென்றவர்கள் வழிவிடவில்லை. பின்னர் காரை பிடித்த பெண் அதிகாரி காரின் டிரைவரை தாக்கியுள்ளார். அப்போது நான் இன்ஸ்பெக்டர் என்பது உனக்கு தெரியாதா, என்னுடன் மோதாதே என்று கூறி இன்ஸ்பெக்டர் அனு அடித்துள்ளார்.
உடனே லட்சுமணனும் டிரைவரை தாக்கியுள்ளார். அப்போது அங்கு பெரும் மக்கள் கூடினர். சம்பவத்தை பார்த்த மக்கள் மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டவர்களை தாக்கினர். இன்ஸ்பெக்டர் உதவி எண் 100க்கு போன் செய்ய முயன்றார். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பெண் இன்ஸ்பெக்டர் அடிக்கப்படும் சம்பவம் ரஜோரி கார்டன் போலீஸ் நிலையத்திற்கு தெரியவந்தது. அப்போது அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது பெண் இன்ஸ்பெக்டர் தனது கிழிந்த ஆடையை காட்டி அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சித்தார். மேலும், டிரைவரை வேண்டும் என்று அடித்த அவர் உண்மையை மறுத்து பேசினார். இதனையடுத்து விசாரணை அதிகாரிகள் யார் தவறு செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
No comments: