Header Ads

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடலலையெனத் திரண்ட கிளிநொச்சி வாழ் மக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சியில் மஞ்சள் சிவப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட பொதுச் சந்தை வளாகத்தில் மிகவும் எழுச்சிகரமான முறையில் நடைபெற்றது.

இப்பரப்புரைக் கூட்டம் மாற்றுவலுவுடையோர் சங்கத் தலைவர் தி.சிவமாறன் தலைமையில் மாலை 3 மணியளவில் மங்கள விளக்கேற்றல், உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இரவு 9 மணியளவில் நிறைவு பெற்றது.

இதன் போது உரிமை முழக்கக் குரலொலி ஒலிபரப்பப்பட்ட வேளையில் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் தமது கைகளிலிருந்த கொடிகளை அசைத்து ஆர்ப்பரித்துத் தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

இம் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், பா.அரியநேத்திரன், சி.சிறீதரன், கிழக்கு மாகாண சபையினைச் சேர்ந்த கலையரசன், வடமாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை,

கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நாவை. குகராசா, உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், உறுப்பினர்கள், வி.சுவிஸ்கரன், வே.செல்லத்துரை, சு.தயாபரன், மா.சுகந்தன், சி.சுப்பையா, செ.புஸ்பராசா, சி.தவபாலன், சி.சிவச்செல்வன், ப.குமாரசிங்கம்,த.சேதுபதி, இ.பொன்னம்பல நாதன், ம.அன்ரன் டானியல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன்,செயலாளர் கு.சர்வானந்தா, கட்சிச் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

நாங்கள் எங்கள் இனத்தை விற்க முடியாது, தெருவில் விடமுடியாது. எங்கள் இறுதி மூச்சுவரை இனத்திற்காக வாழ்வோம். எங்கள் இனத்திற்கு ஒரு வழியைக் காட்டவேண்டும். நாங்கள் வெல்வோம்! நாங்கள் வாழ்வோம்! இந்த மண்ணில் எங்களுக்கான வாழ்வை அமைப்போம். எனத் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.