Header Ads

அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை தள்ளிப் போக காரணம் என்ன ??

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை நேற்று தள்ளி வைக்கப்பட்டது . இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது .

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா , சசிகலா , இளவரசி , சுதாகரண் ஆகியோரை நீதி மன்றம் குற்றவாளி என அறிவித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தார் . மேலும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும் அபாரதமாக விதித்தார் .

மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை இருந்தால் , குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் ஜாமீன் கேட்க முடியாது . எனவே ஜெயலலிதா சார்பாக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது . தசரா விடுமுறை என்பதால் இந்த மனுவை விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலா விசாரித்தார் . முதலில் அரசு தரப்பு வக்கீல் யாரும் வராததால் , அடுத்த வாரம் வழக்கை தள்ளுபடி செய்தார் . அரசு வக்கீல் இல்லாமலும் வழக்கை விசாரிக்கலாம் என்று ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது . இதனால் வழக்கு மீண்டு விசாரனைக்கு வந்தது . இம்முறை அரசு தரப்பில் பவானிசிங் ஆஜாரானர் .

இறுதியில் வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தார் நீதிபதி . மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கான இந்த வழக்கில் ஒரு போதும் விடுமுறைக்கால நீதிபதி ஜாமீன் வழங்குவதையோ , தீர்ப்பை சஸ்பெண்ட் செய்வதையோ விரும்ப மாட்டார்கள் . எனவே ரத்தினகலா இந்த வழக்கை அடுத்த வாரம் ரெகுலர் பெஞ்சு விசாரிக்கும் விதமாக அடுத்த வாரம் வழக்கை தள்ளுபடி செய்தார் .

No comments:

Powered by Blogger.