Header Ads

ரஜினி படத்தை இயக்குகிறீர்களா? என்று கேட்டாலே டென்சனாகும் கே.வி.ஆனந்த்!

பொதுவாக ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும். அதனால் அவர்களுக்காக ஸ்கிரிப்ட் பண்ணி வைத்திருப்பவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கதையை சொல்லிவிட்டு வருவார்கள். அதையடுத்து, சில மாதங்களாக அவர்களிடமிருந்து பதில் வரும் என்று காத்திருப்பார்கள். அதற்கான அறிகுறியே தென்படாதபோது வேறு நடிகர்களை வைத்து படம் பண்ணத் தொடங்கி விடுவார்கள்.

அப்படித்தான், ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்து கதை சொன்ன சில இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர். ஆனால், ரஜினி போன்ற நடிகர்களைப்பொறுத்தவரை, கதை பிடித்து விட்டால் பின்னர் அவர்களுக்கு எப்போது தோனுகிறதோ அப்போதுதான் சம்பந்தப்பட்ட டைரக்டர்களை அழைப்பார்கள். ஒருவேளை சொன்ன கதை பிடிக்கவில்லை என்றால் அதை ஓப்பனாக சொல்ல மாட்டார்கள். அதை வைத்தே கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் இயக்குனர்கள் தங்கள் கதை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் காலாகாலமாக நடந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், கே.வி.ஆனந்த் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால்தான் அதன்பிறகு அவரை அவர் அழைக்கவே இல்லை. அதனால் அவரும் அதை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். இருப்பினும், அவர் ஒவ்வொரு புதுப்படத்தை ஆரம்பிக்கும்போதும், ரஜினியை அவர் இயக்குவதாக செய்திகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் அது சம்பந்தமாக செய்திகள் வெளியாவதைக்கண்டாலே, நான் ரஜினி சாரை சந்திக்கவும் இல்லை, கதையும் சொல்லவில்லை. என்னை விட்டுடுங்கப்பா என்று டென்சனில் பேசுகிறார் கே.வி.ஆனந்த்.

No comments:

Powered by Blogger.