Header Ads

கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கற்பழிப்பு:வாலிபர் கைது?

பெங்களூர், ஜூன்.10–

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ராதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எலக்ட்ரானிக் சிட்டி அருகே தோகூரில் உள்ள தங்கும் விடுதியில் ராதா தங்கி இருந்தார். அந்த தங்கும் விடுதியின் அறைக்குள் புகுந்த மர்மநபர், ராதாவை கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மர்மநபரை தேடி வந்தனர். மேலும் போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் 3 நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ராதாவை கற்பழித்ததாக 25 வயது வாலிபரை கைது செய்திருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதை போலீசார் மறுத்தனர். இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.