Header Ads

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் ஆரோக்கிய உணவு முறைகள்

இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நிறையபேர் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் டயட், பட்டினி கிடப்பது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காமல்  நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டில் சிலவற்றை ஒதுக்கி சிலவற்றை சேர்த்து கொண்டாள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.. அவை என்னவென்று பார்க்கலாம்.

* நாம் சாப்பிடும் உணவில் எப்போதும் மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் காரம் அதிகமாக சேர்க்க கூடாது. பச்சை மிளகாய் காரத்தை கண்டிப்பாக சேர்க்க கூடாது. 

* எண்ணெய் அதிகமாக உள்ள உணவினை தவிர்த்து விடுங்கள். அதாவது மாலை நேரத்தில் நொறுக்கு தீனிகளை சாப்பிடாமல் வேக வைத்த காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை சேர்த்து கொள்ளுங்கள். சூப் எடுத்து கொள்ளுங்கள். 

* சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ் குடியுங்கள். சர்க்கரை சேர்த்தால் அதன் சத்து குறைந்து விடும். அதற்கு பதிலாக தேன், நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். 

* சாப்பிடும் சாப்பாடனாது ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருக்கட்டும். அதாவது இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்றவைகளாகும். 

* அரிசியால் செய்யப்பட்ட உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட்டை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வது அவசியம். இது உடலுக்கு சக்தியையும், தெம்பையும் கொடுக்கும். 

* புளிப்பு சுவை உள்ள உணவினை தவிர்த்து கொள்ளுங்கள். புளிப்பு சுவைக்காக தக்காளியை உணவில் சேர்த்து கொள்ளலாம். 

* மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்தால் பட்டினி இல்லாமல் மேலும் எந்தவித சிரமங்கள் இல்லாமல் உங்கள் உடலை கட்டுகோப்பாக வைக்க முடியும்.

No comments:

Powered by Blogger.