Header Ads

மேற்கு வங்காளத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார்

மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்த இளம்பெண்ணை பஞ்சாயத்து உத்தரவின்பேரில் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கற்பழித்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இளம்பெண் கற்பழிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பேரையும் உடனடியாக போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவர் அங்குள்ள துணைக்கோட்ட நீதிபதியான பிஜுஷ் கோஷ்சிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். பிற்பகல் 2 மணி அளவில் நீதிமன்றத்திற்கு தனது தாய் மற்றும் மருத்துவர்களுடன் அங்கு வந்த அவர் 3 மணி நேரத்திற்கு மேலாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். பின்னர் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

No comments:

Powered by Blogger.