Header Ads

நடிகைகளுடன் உல்லாசம் : விஷால் உள்பட கோலிவுட் நடிகர்களுக்கு மிரட்டல் கடிதம்

கோலிவுட்டின் முக்கிய நடிகர்களுக்கு மர்ம நபர்களிடம் இருந்து இன்று காலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாசர், விஷால், சிவகுமார், சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தெரிகிறது. அந்த கடிதங்களில் அவர்களின் பெர்சனல் ரகசியங்களை குறிப்பிட்டு, இதுமாதிரியான செயல்களை உடனே நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டப்பட்டுள்ளதாம்

அசிங்கமான வார்த்தைகளும் அந்த கடிதங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நாசர் இது குறித்து கூறியதாவது: 'நேரில் வந்து தங்களது கருத்தை தெரிவிக்க முடியாத கோழைகள் இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளனர். இருப்பினும் இதை நான் சும்மா விடப்போவதில்லை. சென்னை திரும்பியதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்' என்று கூறினார்.

விஷால், சந்தானம் போன்ற நடிகர்களுக்கு எந்தெந்த நடிகைகளுடன் தொடர்பு, எங்கெல்லாம் அவர்கள் சொத்து வாங்கி குவித்துள்ளார்கள் என்பதெல்லாம் குறிப்பிட்டு அசிங்கமாக எழுதியதாகவும், சிவகுமாருக்கு அவருடைய அறக்கட்டளையில் வரும் பணத்தை அவர் தவறாக உபயோகிப்பதாகவும் மொட்டை கடிதங்களில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த மிரட்டல் கடிதங்களால் கோலிவுட் அதிர்ச்சியடைந்துள்ளது.

No comments:

Powered by Blogger.