Header Ads

தான் இயக்கும் படத்துக்கு முன்னனி நாயகர்களை நாடும் பார்த்திபன்

புதுமை விரும்பி பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்தில் கதையே கிடையாதாம் வெறும் திரைக்கதையும், காட்சிகளும்தானாம். கதை இல்லாமலும் படம் எடுக்க முடியும்  என்பதை காட்டத்தான் இந்த புதுமையான படத்தை இயக்கி வருகிறாராம்.

தான் இயக்கும் இந்த படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அனைவரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து அதிக ஹீரோக்கள் நடித்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்த இருக்கிறாராம்.

இதற்காக அனைத்து ஹீரோக்களையும் சந்தித்து வருகிறாராம் இதுவரை சூர்யா, ஆர்யா, விஜய்சேதுபதி, சேரன், காஜல் அகர்வால் ஆகியோர் ஓகே சொல்லி இருக்கிறார்கள்.

பிரபு தேவா ஒரு பாடலுக்கு ஆடிக்கொடுக்க சம்மதித்திருக்கிறார். ரஜினி, கமல் வரைக்கும் வலைவீசிக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். எதையும் புதுமையாக செய்ய விரும்பும் பார்த்திபனுக்கு மற்ற நடிகர்கள் ஆதரவு கொடுப்பது அதிசயம் இல்லை.

No comments:

Powered by Blogger.