Header Ads

நயன்தாரா சௌகரியமா? மனம் திறக்கிறார் சிம்பு

எனக்கு நயன்தாராவுடன் பணியாற்ற தற்போது சவுகரியமாக உள்ளது என்று கூறியுள்ளார் சிம்பு.
முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் யாருமே எதிர்பாரா வண்ணம் பாண்டிராஜ் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.

படத்தில் நடிக்க நயன்தாரா முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டார்.

சிம்புவும், நயனும் 6 ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் பாண்டிராஜ் படம் பக்கம் திருப்பியுள்ளது.

முன்னாள் காதலியான நயன்தாராவுடன் நடிப்பது குறித்து சிம்புவிடம் கேள்வி எழுப்புகையில், அவருடன் நடிப்பது தற்போது சவுகரியமாக உள்ளது என்றும் நான் நயன்தாராவை பார்த்து வசனம் பேசுகையில் மொத்த படக்குழுவும் எங்களையே பார்ப்பது தான் எனக்கு அசவுகரியமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.