Header Ads

கள்ள தொடர்பை தட்டிக்கேட்ட 3 குழந்தைகளின் தாய் கழுத்தை இறுக்கி கொலை: கணவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). டிராக்டர் டிரைவர். இவருக்கும் ஆற்காடு கிருஷ்ணன் தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரி (34) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு சித்ரா (13), விக்ரம் (11), சினேகா (9) என 3 குழந்தைகள் உள்ளனர். இதில் சித்ரா, விக்ரம், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள்.
திருமணத்திற்கு பின்னர் மணிகண்டன் ஆற்காட்டில் வாடகை வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரணியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த உமாமகேஸ்வரி கணவனை தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
கடந்த 25–ம் தேதி மணிகண்டன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உமாமகேஸ்வரி சம்பாதிக்கும் பணத்தை குடிக்கவும் கள்ள காதலிக்கும் செலவு செய்தால் எப்படி குடும்பம் நடத்துவது என கூறி தகராறு செய்தார்.
இதையடுத்து தம்பதிகளுக்கு இடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் உமாமகேஸ்வரியை தாக்கி துண்டால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடினார்.
அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் தாயின் பிணத்தை அருகே நின்று கொண்டு அழுது கொண்டிருந்தனர். அவர்களின் அழும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இது குறித்து ஆற்காடு கிராம நிர்வாக அதிகாரி தேவராஜ் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் ஆற்காடு பைபாஸ் சாலை அருகே நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.