Header Ads

நெருக்கமான காட்சிகளில் ஹீரோவின் ஒத்துழைப்பு சூப்பர் : பூஜா காந்தி

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை சொல்லும் கதையில் நடிக்கிறார் பூஜா காந்தி. இதில் கிக்கான காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. கன்னட படங்களில் நடித்துவரும் இவர் பரபரப்பான காட்சிகளில் நடித்து சர்ச்சை கிளப்புவதில் கைதேர்ந்தவர். தண்டுபால்யா என்ற படத்தில் கொலை செய்து கொள்ளையடிக்கும் ரவுடிகளின் கூட்டாளியாக நடித்ததுடன் பின்னழகு தெரியும்படி நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இது பற்றி கேட்டபோது, கதைக்கு அப்படி தேவைப்பட்டதால் நடித்தேன் என்றார். தற்போது அபிநேத்ரி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். 

பழம்பெரும் கன்னட நடிகை கல்பனாவுக்கும், இயக்குனர் புட்டன்ன கனகலுக்கும் இடையேயான ரகசிய உறவை மையமாக வைத்து இக்கதை உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது, இப்படத்தில் நான் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கும் ஸ்டில்களை பார்ப்பவர்கள் நடிகை கல்பனாவின் கதை என்று கூறுகிறார்கள். ஆனால் இது அவரது கதை இல்லை. சொல்லப்போனால் நிறைய நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை என்று கூறலாம். 

என்னுடைய வாழ்க்கை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகிறதா என்றும் சிலர் கேட்கின்றனர். என் வாழ்க்கையை புத்தகமாக எழுதும் அளவுக்கு அல்லது படமாக்கும் அளவுக்கு பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் உள்ளடக்கியது என்றாலும் இந்த படத்துக்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. இப்படத்தில் அதுல்குல்கர்னியுடன் நெருக்கமாக நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அவர் நன்கு ஒத்துழைப்பு அளித்தார் 

No comments:

Powered by Blogger.