Header Ads

பிரசன்னா ஓவியா காதல் ....கடுப்பில் சினேகா!

புலிவால் படத்தில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பிரசன்னாவிற்கும், கூட வேலை செய்யும் ஓவியாவிற்கும் காதல். இருவரில் ஒருவர் வேலை மாற்றலாகி வெளியூர் செல்ல வேண்டிய நிலை வந்ததும் வேலையை விட காதல் பெரிது என முடிவு எடுக்கிறார் பிரசன்னா. பிறகு ஏற்படும் சிக்கலை காமெடியுடன் சொல்லி இருக்கிறார்களாம். 

இந்த படத்தில் காதலர்களாக நடித்த பிரசன்னாவிற்கும் ஓவியாவிற்கு நிஜமாகவே காதல் பற்றிகொண்டதாகவும், இதனால் காட்சி முடிந்ததும் இருவரும் கேரவனில் மணிக்கணக்கில் பேசி கொள்வதாகவும் சொல்கிறார்கள்.இது சினேகாவுக்கு தெரிந்ததும் கொதித்து விட்டாராம். 

பிரசன்னாவை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டு, பிறகு ஓவியா வீட்டிற்கே சென்று சண்டை போட்டு பெரிய பிரச்சினை செய்து விட்டாராம். இரு நடிகைகள் போட்டு கொண்ட சண்டையால் அந்த பகுதியே திரண்டு வந்து விட்டதாம். பிறகு சினேகாவின் குடும்ப நண்பர் வந்து சினேகாவை பேசி, அழைத்து சென்றிருக்கிறார். பிரசன்னா, ஓவியாவை இனி தானே கண்காணிக்க போவதாகவும் சொல்லி இருக்கிறாராம் சினேகா.

No comments:

Powered by Blogger.