Header Ads

கிருஷ்ணகிரியில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது

கிருஷ்ணகிரியில் நடந்த காதல் ஜோடிகளின் உண்மை கதை நீ என் உயிரே என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி வசனம் எழுதி இயக்கும் விகாஷ் லலித்ராஜா கூறியதாவது: கடந்த 2003ம் ஆண்டு  கிருஷ்ணகிரியில் நடந்த நிஜ காதல் சம்பவத்தை மையமாகவைத்து இப்படம் உருவாகிறது. மெக்கானிக் ஒருவனுக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கு பணம், ஜாதி, மதம், அரசியல் போன்றவற்றால் எந்த எதிர்ப்பும் வரவில்லை. எதிர்பாராத ஒரு காரணம் அவர்களின் காதலுக்கு குறுக்கே நின்றது. 

அந்த எதிர்ப்பையும் மீறி வாலிபனை நம்பி வருகிறாள் காதலி. அவளது வாழ்க்கை சந்தோஷமாக அமைகிறதா? சோகத்தில் முடிகிறதா? என்பதை ஒரு மெசேஜுடன் கிளைமாக்ஸ் சொல்கிறது. கதை, திரைக்கதை எழுதி தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார் புதுமுகம் நவரசன். புதுமுகம் வைஷாலி ஹீரோயின். தங்கவேல், ரவி, அட்சயா, உமாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

மோகன்-ஜீவன் ஆண்டனி இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். விஜய் மந்தரா இசை அமைக்கிறார். கரூரில் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்துள்ளது. ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூர், மங்களூரிலும் ஷூட்டிங் நடந்திருக்கிறது. 

No comments:

Powered by Blogger.