அஜித் சார் நிஜத்துல எப்படி இருக்காரோ...? : வீரம் பஞ்ச் டயலாக் ரகசியங்கள்
பெரும்பாலும் மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்கள் என்றால் அந்தப் படத்தில் வரும் வசனங்கள் எல்லாமே அந்த ஹீரோவை துதிபாடும் வசனங்களாகத் தான் இருக்கும்.
ஆனால் அஜித்தின் ‘வீரம்’ படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகள் எல்லாமே அஜித்தின் புகழைப்பாடாமல் படம் பார்க்கும் எல்லா ரசிகர்களையும் சிந்திக்க வைக்கும் வசனங்களாக இருப்பதால் தியேட்டரில் கை தட்டல்களையும், விசில் சத்தங்களையும் ஒருசேரப் பெற்றுக் கொண்டிருக்கிறது.
வீரம் படத்தில் வரும் எல்லா வசனங்களையும் அதன் அழகு மாறாமல் ஒரு சாதாரண ரசிகனையும் சீட்டின் நுணியில் கட்டிப் போடும் விதமாக எழுதியிருக்கிறார் டைரக்டர் சிவா.
இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது “அவரோ.., எல்லாமே அஜித் சார் கொடுத்த ஊக்கம் தான்” என்று சிலாகித்துச் சொன்னார்.
“படத்துல வர்ற எல்லா டயலாக்குகளுமே அஜித் சாரை மனசுல வெச்சுத்தான் எழுதினேன். சமீபத்துல தான் அவரோட வீட்டுல பல வருஷங்களா வேலை பார்க்கிறவங்களுக்கு சொந்தமா வீடு வாங்கிக் கொடுத்தார். அதைப் பார்த்து தான் “நம்மளை சுத்தி இருக்கிற நாலு பேரை நாம நல்லா பார்த்துக்கிட்டோம்னா, மேல இருக்கிற கடவுள் நம்மளை நல்லா பார்த்துப்பான்”ங்கிற டயலாக்கை எழுதினேன்.
அதேமாதிரி அஜித் சார்கிட்ட நீங்க என்ன சாதி?ன்னு கேட்டா புடிக்கவே புடிக்காது. அதை கேட்ட உடனே அஜித் சார் வில்லன்கிட்ட பேசுற, ‘நீ தேவர்னு நினைச்சா தேவன், நாடார்னு நினைச்சா நாடான், தலித்துன்னு நினைச்சா தலித். கவுண்டர் நினைச்சா கவுண்டன். அய்யர்னு நினைச்சா அய்யன். நீ என்னை எப்படி பார்க்கிறாயோ, நான் அந்த சாதிடா, மொத்தத்துல நான் உழைக்கிற சாதிடா’ன்னு பேசுற டயலாக்கை எழுதினேன்.
இப்படி எல்லா வசனங்களையும் அஜித் சார் நிஜத்துல எப்படி இருக்காரோ..? நடந்துக்கிறாரோ..? அதைப் பார்த்து பாலோ பண்ணித்தான் எழுதினேன். அது எல்லாமே இப்போ சூப்பரா ஒர்க்-அவுட்டாகியிருக்கு. அதுவுமில்லாம நானே அஜித் சாரோட தீவிர ரசிகன் தான் என்றார் டைரக்டர் சிவா.
No comments: