Header Ads

அமெரிக்காவில் 14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 6 மாத சிறை தண்டனை

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் வசித்து வரும் 28 வயதான அலிசியா கிரே திருமணமானவர் ஆவார். அவர் அங்குள்ள மோண்ட்கோமரி பள்ளியில் கணித துறை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது தன்னிடம் படிக்கும் 14 வயது மாணவனுடன் அவர் பாலியல் உறவு கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு மிகவும் உறுதுணையாகவும், ஆறுதலாகவும் அவரது கணவர் இருந்தார் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட மாணவன், "2013ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் முதல் அவனுக்கும் அலிசியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், நாளடையில் அது மிகவும் நெருக்கமடைந்த காரணத்தால் தனது வீட்டில் தாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளான். மேலும் அலிசியாவின் நிர்வாண புகைப்படத்தை அடிக்கடி செல்போன் மூலம் தனக்கு அவர் அனுப்பியதாகவும் தெள்ளத் தெளிவாக கூறினான்.

இதனையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள் அலிசியாவிற்கு 6 மாத சிறைதண்டனையும், 5 வருட காலத்திற்கு நன்னடத்தையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அவரது ஆசிரியர் சான்றிதழையும் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டனர். அவருக்கு நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரால் இனி மைனர்களோடு இணைந்து பணியாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.

கல்வி கற்றுக்கொடுக்கவேண்டிய ஆசிரியரே மாணனுடன் களவியில் ஈடுபட்டது அந்நாட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.