Header Ads

மோகன்லால் படத்தை நெட்டில் விட்ட பிளஸ் 2 மாணவன்

மோகன்லால், மீனா, நடித்த த்ரிஷ்யம் மலையாளப் படம் சமீபத்தில் வெளியானது. மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் டைரக்ட் செய்துள்ளார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும் த்ரிஷ்யம் தொடர்ந்து திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்லாக ஒடிக் கொண்டிருக்கிறது. 

படத்திற்கு வரவேற்பு இருப்பதால் திருட்டு விசிடிக்கள் வெளிவந்திருக்கிறது. நெட்டிலும் அப்லோட் செய்துவிட்டார்கள்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூர் கேரள டி.ஜி.பி பாலசுப்பிரமணியத்திடம் நேரில் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் படத்தை நெட்டில் விட்டவரை தேடினர். 

அப்போது ஒரு பேஸ்புக் பக்கத்திலும் படம் அப்லோட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பேஸ்புக் முகவரியை தேடியபோது அது கொட்டாரக்கராவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் என்பது தெரியவந்தது. நெட்டில் படத்தை விட்டதையும், பேஸ்புக்கில் போட்டதையும் ஒத்துக் கொண்டான். அவனது பேஸ்புக்கில் மட்டும் 10 ஆயிரம் பேர் படத்தை பார்த்துள்ளனர்.

அந்த மாணவன் வீட்டில் இருந்து கம்ப்யூட்டர், ஹார்ட்டிஸ்க், நிறைய புதுப்பட சி.டிக்கள், பென் டிரைவ்களை கைப்பற்றி உள்ளனர். அவனுக்கு பின்னால் ஒரு சக்தி இருந்து இயங்குகதவாக போலீஸ் நம்புவதால் மாணவன் பற்றிய விபரங்களை வெளியிடாமல் வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Powered by Blogger.