பார்த்திபன் ஜோடியானார்
சிவகாசி, திருப்பாச்சி படங்களை டைரக்ட் செய்த பேரரசு இப்போது டைரக்ட் செய்து வரும் படம் திகார்.
தமிழ் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் கேரளா மற்றும் மும்பையில் பெரிய தாதாவா இருந்த அலெக்சாண்டரின் வாழ்க்கையை தழுவியது.
உன்னிமுகுந்தன், அகன்ஷாபூரி, கிருதிபாபட் என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் தாதா அலெக்சாண்டராக பார்த்திபன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை பிரியங்காக நடிக்கிறார்.
இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஏவிஎம் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. வழக்கமாக தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்களில் படம் எடுக்கும் பேரரசு முதன் முறையாக டெல்லி மத்திய சிறைச்சாலை உள்ள திகார் என்ற ஊரின் பெயரில் படம் டைரக்ட் செய்கிறார்.
No comments: