சூர்யாவுடன் இணைய விரும்பும் ஈரான் நடிகை
சூர்யாவுடன் ஜோடி சேர ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை மரியம் ஸகாரியா.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் குத்தாட்டம் போடுவதற்காக ஈரானை சேர்ந்த மரியம் ஸகாரியா ஒப்பந்தம் ஆனார்.
இவர் ஏற்கனவே தமிழில் வெளியான நகரம் படத்தில் குத்தாட்டம் ஆடியுள்ளார்.
தற்போது சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டிருக்கும் இவர் அந்த அனுபவம் குறித்து கூறுகையில்,லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட கேட்டார்கள்.
சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சூர்யா என்னிடம் மிகவும் நட்புடன் பழகினார், அவருடன் ஆடியபோது வேலை செய்கிறோம் என்ற சோர்வே தெரியவில்லை.
மேலும், நான் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடும் நடிகை என்பதால் ஆடுவதில்தான் எனக்கு ஆர்வம். ஆனால் சூர்யாவுடன் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசையும் என்னுள் தோன்றியது என்று கூறியுள்ளார்.
No comments: