'வீரம்' வெற்றிக்குப் பின்னர் 'மகாபலி'யை எதிர்நோக்கும் தமன்னா
நடிகர் அஜீத்துடன் நடிகை தமன்னா இணைந்து நடித்து பொங்கலுக்கு வெளிவந்துள்ள 'வீரம்' ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியுடன் தனது அடுத்த இருமொழித் திரைப்படமான 'மகாபலி'யின் தயாரிப்பை தமன்னா ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.
'நான் ஈ' படப்புகழ் இயக்குனரான ராஜமௌலி இயக்கவுள்ள 'மகாபலி' தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
அனுஷ்கா முக்கிய வேடத்தில் தோன்றுவது குறித்து அவரிடம் கேட்டபோது இந்தப் படத்தைப் பொறுத்தவரை தான் இயக்குனர் ராஜமௌலியை நம்புவதாகத் தெரிவித்தார். அவரது இயக்கத்திலும், பெரிய பட்ஜெட் படமான மகாபலியிலும் நடிப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய தமன்னா ஒரு படத்திற்கு கையெழுத்திடும் முன்னர் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி மட்டுமே தான் யோசிப்பதாகக் கூறினார்.
இரட்டை வேடத்தில் தோன்றும் நடிகர் பிரபாசுடன் தனக்கும் காட்சிகள் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார். வரலாற்றுப் படமான இதில் தன்னுடைய கதாபாத்திரம் தனக்குப் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்ட தமன்னா படப்பிடிப்பு துவங்கும் காலத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் கூறினார்
No comments: