Header Ads

நிரூபணமானது ஷங்கரின் கணிப்பு

ஷங்கரின் கணிப்பு நிரூபணமாகிவிட்டது என்று சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
பத்து வருடங்களுக்கு முன் வெளியான முதல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அனைவரும் இயக்குனர் ஷங்கரை பாராட்டினார்கள்.

ஆனால் சிலரோ இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் கிண்டலடிக்கவும் தவறவில்லை.

இந்தியிலும் கூட ‘நாயக்’ என்ற பெயரில் இந்தப்படத்தை ரீமேக் செய்தார் ஷங்கர்.

ஆனால் அந்தப்படம் வெளியாகி பத்து வருடங்கள் கழிந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிட்டு டெல்லியின் முதல்வராக பதவியேற்று இருப்பது கிட்டத்தட்ட ‘முதல்வன்’ படத்தின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள் பலரும்.

இப்படி ஒருநாள் நடக்கும் என அப்போதே கணித்த ஷங்கரின் இந்த தீர்க்க தரிசனம் பற்றி பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும் ஷங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.

No comments:

Powered by Blogger.