வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயவாணி லண்டனில் குழந்தைகளுடன் தற்கொலை? நடந்தது என்ன?
சில தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 9ம்ம் திகதி அன்று இலங்கைப் பெண் லண்டனில் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகியது யாவரும் அறிந்ததே.
இப் பரிதாப மரணங்கள் தொடர்பில் தெரிய வருவது என்னவெனில்,
யாழ் வல்வெட்டித்துறை நெடியகாட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் வாகீஸ்வரன். அவரது மனைவி ஜெயவாணி(வயது 33), பிள்ளைகள் அனோபன்(வயது 5), நதீபன்( 8 மாதம்) ஆகியோர் தந்தை வாகீஸ்வரனுடன் வடமேற்கு லண்டன் Harrow Woodgrange Close பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயவாணி தனது இரு பிள்ளைகளுடன் கடந்த 9ம் திகதி அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தினம், கணவர் வாகீஸ்வரன் வேலைமுடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் பிள்ளைகள் உட்பட மனைவியும் உயிரற்று சடலமாக கிடந்ததைப் பார்த்தவுடன் பொலிஸ் மற்றும் அம்பூலன்ஸ் சேவைக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
சம்பவ தினத்தன்று காலை கணவர் வேலைக்கு புறப்படு முன்னர், அனோபனை பள்ளிக்கூடம் கூட்டிச் செல்லவில்லயா ? என்று கேட்டுள்ளார்.
ஆனால் மனைவி ஜெயவாணி கணவன் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாது இருந்ததோடு, அன்று பள்ளிக்கூடம் செல்வதற்கான ஆயத்தம் எதுவும் செய்யவும் இல்லை. "ஏன் இப்படி" என்று யோசித்தவாறு கணவர் வாகீஸ்வரன் வேலைக்குச் சென்றுள்ளார்.
கணவர் வேலையில் இருந்து பல தடவை வீட்டு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்திய போது அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை.
கணவன் வீட்டை விட்டு வெளியேறியதும் வீட்டில் உள்ள தொலைபேசி வயரை ஜெயவாணி துண்டித்துள்ளார்.
சம்பவ தினத்திற்கு முதல் நாள், ஜெயவாணிக்கும் அவர் கணவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்தில் குறைந்தது 4 தடவையாவது இவர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் நடைபெறும் என்று குறித்த மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணையின் போது அயலவர்கள் கூறியுள்ளார்கள். இருப்பினும் ஜெயவாணி கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சில மாதங்களின் முன்னர் அனோபனுக்கு 5வது பிறந்த தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடியதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையின் கையைக் கட்டிவிட்டு அச் சிறுவனின் தலையில், கறுப்பு நிற பொலித்தீன் பையை போட்டு மூடிக் கட்டியுள்ளார். இதன் காரணமாகவே அச் சிறுவன் இறந்துள்ளான். 8 மாதம் நிரம்பிய மற்றைய கைக் குழந்தையும் இவ்வாறே பொலித்தீன் பை தலையில் போட்டு கட்டி இறக்கப்பட்டுள்ளான்.
பின்னர் ஜெயவாணி தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை. கயிறு அல்லது அதுபோன்ற பொருள் ஒன்றை எடுத்து, தனது கழுத்தை இறுக்கியே தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் மது அருந்தினாரா , எவ்வாறு தன்னை மாய்த்துக்கொண்டார் என்பதுபோன்ற விடயங்கள் பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே உறுதிசெய்யப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைச் சேர்ந்த சக்திவேல் வாகீஸ்வரன் 10 வருடத்திற்கு முன்னர் லண்டன் வந்துள்ளார். லண்டனில் உள்ள South Bank University இல் கல்வி கற்றுள்ளார். தற்பொழுது Vaasi Accountancy என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
எனது மனைவி இவ்வாறு நம் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்யக்கூடியவளா என என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. என்னால் அந்த வீட்டுக்குள் செல்ல மனசே இல்லை என வாகீஸ்வரன் அழுதவண்ணம் உள்ளார் எனவும் ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயவாணிக்கு என்று நெருக்கமான நண்பிகள் எவரும் கிடையாதாம். மேலும் அவர் தனக்கு ஏற்படும் கஷ்டங்களை, எவரிடமும் சொல்பவரும் அல்ல. ஒரு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் கூட அதனை வெளியே சொல்லி ஆறுதல் அடைய கூட வாய்ப்புகள் அவருக்கு இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இப் பரிதாபகர மரணங்கள் தொடர்பில் இதுவரையில் 3வது நபர்கள் இருப்பார்களா என பொலிஸார் சந்தேகிக்கவில்லை. இருப்பினும் விசாரணைகள் தொடர்கின்றன.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கணவன் பொலிசாருக்கு தெரிவித்த தகவலின் பிரகாரமே இவ்வாறு லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி
No comments: