மகேஷ்பாபு, நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் புதுப்படம் இயக்கும் மணிரத்னம்
நாயகன், அக்னி நட்சத்திரம், ரோஜா, பம்பாய் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் மணிரத்னம். இவர் தமிழில் கடைசியாக கடல் என்ற படத்தை இயக்கினார்.
இவர் அடுத்து தெலுங்கில் படம் இயக்குகிறார். இதில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் இன்னொரு முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். இப்படம் பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நாகார்ஜுனா. ஏற்கனவே இருவர் உழைப்பில் வந்த கீதாஞ்சலி படம் ஆந்திராவில் நிறைய விருதுகளை அள்ளி குவித்தது.
No comments: