Header Ads

அலெக்சாண்டர் மரணத்தில் சர்ச்சை: விஷம் கலந்த ஒயின் குடித்து இறந்ததாக தகவல்

பழமைவாய்ந்த கிரேக்க நாட்டின் மன்னன் மாவீரன் அலெக்சாண்டர். சர்வதேச நாடுகளில் வெற்றி வாகை சூடி உலகை வலம் வந்த இவர் கி.மு.323–ம் ஆண்டு ஜூன் 11–ந்தேதி தனது 32–வது வயதில் தேதி பாபிலோனில் மரணம் அடைந்தார்.

மரணத்துக்கு முன்பு இவர் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். நடக்க முடியாமலும், வாய் பேச முடியாமலும், தொடர் வாந்தியாலும் 12 நாட்கள் கடும் அவதியுற்றார். இவர் இயற்கையாக மரணம் அடைந்தார் என்று ஒரு சாராரும், விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்று மற்றொரு சாராரும் கூறி வந்ததால் இவரது சாவில் சர்ச்சை நிலவியது.

அதற்கு முடிவு கட்டும் வகையில், விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். நியூசிலாந்தில் உள்ள ஒடாகோவா பல்கலைகழகத்தின் தேசிய விஷ மைய பிரிவு பேராசிரியர் லியோ ஸ்கைட் ஆய்வு நடத்தினார்.

இவர் கடந்த 2003–ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் தனது ஆய்வை மேற்கொண்டார். இறுதியில், அலெக்சாண்டர் விஷம் கலந்த ஒயின் சாப்பிட்டதால் மரணம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அந்த ஒயினுடன் விஷதன்மையற்ற ஒருவித வெள்ளை பூக்கள் பூக்கும் தாவரம் சேர்த்து ஊற வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக அதில் இருந்து இறங்கிய ஒரு வித கொடிய விஷம் அலெக்சாண்டரின் உயிரை பறித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கருத்தைதான் அவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்ட நியூசிலாந்து நிபுணர் பாட் வீட்லியும் கூறியுள்ளார். கிரேக்க நாட்டில் ஒயினுடன் போதைக்காக இது போன்ற தாவரம் சேர்த்து ஊற வைப்பது வழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.