Header Ads

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட இசைப்பிரியா வாழ்க்கை சினிமா படமாகிறது

ஈழத்தில் சிங்கள ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப் பிரியாவின் வாழ்க்கை சினிமாபடமாகிறது. இந்த படத்துக்கு போர்களத்தில் ஒரு பூ என பெயரிட்டுள்ளனர். கணேசன் இயக்குகிறார். இசைப்பிரியா வானொலியில் பணியாற்றியது. ஈழ விடுதலை போராட்டங்களில் பங்கேற்றது. சிங்கள ராணுவ வீரர்களிடம் சிக்கி சித்ரவதைகள் அனுபவித்து உயிர் இழந்தது போன்றவை இந்த படத்தில் காட்சி படுத்தப்படுகிறது. 

இதில் இசைப் பிரியா கேரக்டரில் நடிக்க அனு என்ற புதுமுக நடிகை தேர்வாகியுள்ளார். நிறைய பேரை பரிசீலித்த பிறகு அனுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் நடிப்பது குறித்து அனு கூறும்போது இசைப் பிரியாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. இயக்குனர் அவரைப்பற்றிய விவரங்களை என்னிடம் சொன்னார். வீடியோ படங்களையும் காட்டினார். அவர் வாழ்க்கை கதையை கேட்க கஷ்டமாக இருந்தது. 

படப்பிடிப்பில் சில காட்சிகளில் நடித்த போது அழுது விட்டேன் என்றார். இப்படத்துக்கு இளைய ராஜா இசையமைக்கிறார்.

No comments:

Powered by Blogger.