Header Ads

14 வயது மகளை 2 வருடங்களாக 20 முறை கற்பழித்த அரக்க குணமுள்ள தந்தை

புனே லோகவுன் பகுதியில் வசித்து வருபவர் சகாபுதீன் பந்து அன்சாரி (வயது 37) இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.இவர் லோகவுன் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவர முதல் மனைவி இறந்து விட்டார்.

அன்சாரி தனது 2 வது மனைவி தாய், தந்தை மற்றும் முதல்மனைவிக்கு பிறந்த 16 வயது சிறுமி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் விமந்தால் பகுதி போலீசில் அன்சாரியின் தாய் தந்தை ஒரு புகார் அளித்து உள்ளனர். அதில் அனசாரி கடந்த  2 வருடங்களாக மகளை வலுக்கட்டாயமாக கற்பழித்து வருவதாக கூறி உள்ளனர்.

பல முறை கூறிப்பார்த்தும் அன்சாரி திருந்தவில்லை நாளுக்கு நாள் அவன அந்த பெண்ணை அதிகம் கொடுமை படுத்தி வருகிறான் பொறுத்துப்பார்த்து  சிறுமியின் தாதா-பாட்டி இந்த புகாரை போலீசில் அளித்து உள்ளனர்.

இதை தொடரந்து விமந்தால் போலீசார் ஆட்டோ டிரைவர் அன்சாரியை கைது செய்தனர். அவன மீது இந்திய தண்டனை சட்டம் 376, 506 (1), 3 (டி)  குழநதைகள் பாதுகாப்பு , பாலியல் குற்றம் ஆகிவற்றின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி  கூறும் போது, குற்றவாளி தனது மகளை கடந்த 2 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்து உள்ளான்.அவன் தனது மகளை கடந்த 2 வருடங்களில் குறைந்தது 20 முறை கற்பழித்து உள்ளதாக கூறி உள்ளான்.

அன்சாரி தனது மகளிடம் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் விபரீதமான  விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வைத்து உள்ளான்.இந்த தாக்குதல் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியும் ஆனால் அவர்கள் அமைதியாக இருந்து உள்ளனர்.

அந்த பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி செய்த போது பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என தடுத்து விட்டான். இறுதியாக சிறுமியின் தாத்தா-பாட்டி  தங்கள் மகனுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.தொடர்ந்து அந்த பெண்ணும் தற்போது புகார் அளித்து உள்ளார். என கூறினார்.

No comments:

Powered by Blogger.