Header Ads

தினமலர் விமர்சனம் » வாயை மூடி பேசவும்..

நடிகர் : துல்கர் சல்மான்
நடிகை : நஸ்ரியா நஷிம்
இயக்குனர் :பாலாஜி மோகன்..காதலில் சொதப்புவது எப்படி' முதல் படம் தந்த வெற்றி களிப்பில், கொஞ்சம் 'மப்'பில் இரண்டாவதாக வாயை மூடி பேசவும் படத்தை எழுதி இருப்பார் போலும் இயக்குநர் பாலாஜி மோகன்.

'பனிமலை' எனும் மலை பிரதேச ஊரில் மக்கள் வாய்திறந்தது பேசினால்பிரச்னையாகி வியாதி வருகிறது. அதுவும் எப்படி? மனிதர்களை ஊமையாக்கும் வியாதி வெகுவேகமாக பரவுகிறது. அதை தடுக்க அரசே யாரும் பேசக்கூடாது..? என தடை உத்தரவு பிறப்பிக்கிறது. தடையை மீறி பேசுபவர்கள் இறந்து போகிறார்கள். அதே ஊரில் வாழும் நாயகர் துல்கர் சல்மானும், நாயகி நஸ்ரியா நசீமும் எப்படி பேசாமல் காதல் வளர்த்தார்கள், காதலை குடும்பத்திற்கு எப்படி புரிய வைத்தார்கள் எனும் கதையுடன், ஆதரவற்ற ஆசிரம சிறுவர்களுக்கு உதவி, ஸ்டார் நடிகரின் படத்தில் குடிகாரர்கள் பற்றிய கருத்தால் அவரது ரசிகர்களுக்கும், குடிகார சங்கத்தினருக்கும் இடையேயான மோதல், சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டியராஜன், வாயை திறந்தாலே வம்பாகிப்போகும் காமெடி, இயக்குநர் பாலாஜி மோகனின் பிரைம் டி.வி.யின் செய்தி வாசிப்பு., நாயகர், நாயகியின் ஜவ்வுமிட்டாய் பிரியம் உள்ளிட்ட இன்னும் சில சுவாரஸ்யங்களை (மேலும் சுவாரஸ்யம் என கருதியவைகளையும்) சேர்த்து 'வாயை மூடி பேசவும்' என வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார் இயக்குநர். அதில் பெரும்பாதி படம் ஊமை படமாக தெரிவதால் வாய் பேச முடியாதவர்களுக்கு கூட இப்படம் பிடிக்குமா? புரியுமா.? என்பது புரியாத புதிர்!

அது புரிந்தோ, புரியாமலோ துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், பாண்டியராஜன், மதுபாலா, 'மோகமுள்' அபிஷேக், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் 'பளீச்' நடிப்பால் பலே சொல்ல வைத்திருக்கின்றனர். அதிலும், “வாழைப்பழத்தை உரித்து கொடுக்கதான் முடியும், வாயில் வைத்து ஊட்டவா முடியும்?” என சாதாரணமாக அமைச்சர் பாண்டியராஜன் கேட்பது, “வாயில் வைக்கட்டுமா...?” என அமைச்சர் கேட்பதாக பிரைம் டிவியில் திரித்து கூறப்படுவதும், நடிகருக்கு எதிரான போராட்டத்தில் குடிகார சங்கதலைவர் ரோபோ சங்கர், போராட்டத்தின் இடையிடையே “கை நடுங்க ஆரம்பிச்சுடுச்சு ஒரு குவார்ட்டர் போட்டு வந்து பார்த்துக்கலாம்...” என்பது உள்ளிட்ட சுவாரஸ்யங்கள், ஒரு கட்டம் வரை ஓ.கே., ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே ஓவர் டோஸாகிவிடுகிறது. இது இப்படத்திற்கு பலமா, பலவீனமா...? இயக்குநருக்கே வெளிச்சம்!

ஓப்பனிங்கில் வாய் பேச முடியாத வியாதியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ரேடியோ ஜாக்கி பாலாஜியின் குரல்வளையை ஊமை நோய் பரவியதாக சொல்லி நெறித்துவிட்டு, கிட்டத்தட்ட அவரது 'தொண தொணப்பு' வேலையை, பாலாஜியின் பாணியிலேயே பிரைம் டிவியில் இயக்குநர் பாலாஜி மோகனே செய்திவாசிப்பாளராக அடிக்கடி தோன்றி வாசிப்பது, செம காமெடி அல்ல, கடியாக தெரிகிறது.

சென் ரோல்டனின் இசை, சௌந்தராஜனின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், பாலாஜி மோகனின் இயக்கத்தில், பாதி படத்திற்கு மேல் ஊமை படமாக இருப்பது வாய்மூடி பேசவும் படத்தின் பலம் அல்ல, பலவீனம். எனவே வாயை மூடி பேசவும் படத்தை பாலாஜி மோகன், அவர் பாணியில் குறும்படமாக எடுத்திருந்தார் என்றால் ஜெயித்திருக்கலாம், இவ்வாறு பெரும்படமாக எடுத்திருப்பது எவ்விதத்தில் நியாயம்.?!

“வாய்மூடி பேசவும் - கண்மூடி பார்க்கவும் முடியாது, காதுகளை மூடாமலும் கேட்கவும் முடியாது எனும் நிலையில், அதுப்பற்றி வாய்மூடி இருப்பதே மேல் எனும் எண்ணத்தை எற்படுத்தி விடுகிறது

No comments:

Powered by Blogger.