Header Ads

பாண்டிராஜ் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜோதிகா?

நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். நிறைய படவாயப்புகள் வந்தும் நடிக்கவில்லை. 

தற்போது ‘பசங்க’ படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ் குழந்தைகளுக்கான படமொன்றை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தின் கதையை ஜோதிகாவிடம் சொல்லி பாண்டிராஜ் ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து பாண்டிராஜிடம் கேட்டபோது, ‘இதுவரை ஜோதிகாவிடம் கதை சொல்லவில்லை. அவரிடம் கதை சொல்ல யோசித்து கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

No comments:

Powered by Blogger.