Header Ads

பங்களா வீட்டில் போதை விருந்து: கல்லூரி மாணவ, மாணவிகள் 47 பேர் கைது..

பங்களா வீட்டில் இரவு விருந்து என்ற பெயரில் போதையில் ஆட்டம்போட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை லோனவாலா போலீசார் ஹில்ஸ்டேஷன் கோல்டன் வெல்லி பகுதியில் நேற்று  நள்ளிரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்தில் பாட்டுச்சத்தம் கேட்டது.போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். அப்போது இரவு விருந்து என்ற பெயரில் மது போதையில் ஆடிக்கொண்டு இருந்த 47 கல்லூரி மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்தனர்.

 இது குறித்து லோனாவாலா போலீசார் கூறுகையில், ‘‘வீட்டில் இருந்த 47 மாணவர்களை கைது செய்துள்ளளோம். இவர்களில் 22 பேர் மாணவிகள். அவர்கள் அனைவரும் அரைகுறை ஆடையில் இருந்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் போதையில் இருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அதிகம்பேர், வில்லேபார்லேவில் உள்ள குறிப்பிட்ட தனியார் கல்லூரியை சேர்ந்தவர்கள். மேலும் பங்களா வீட்டில் இருந்து மொத்தமாக ஆணுறைகள் மற்றும் மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்றார்.கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவர் மீதும் லோனவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

No comments:

Powered by Blogger.