Header Ads

விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபர் கைது

ராஜேஷ் குமார் பிரேசிலில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் திருமணம் ஆன பெண் ஒருவருக்கு ஜார்க்கண்டை சேர்ந்த தொழில் அதிபர் ராஜேஷ் குமார் சிங் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த அந்த பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்கு பிரேசிலுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். தொழில் அதிபர் ராஜேஷ் குமார் சிங்கும் தொழில் விவகாரமாக பிரேசில் சென்றுவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

அப்போது ராஜஸ்தானை சேர்ந்த பெண் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் ராஜேஷ் குமார் இருந்து பயணம் செய்து வந்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினருடன் ராஜேஷ் நன்றாக பேசியுள்ளார். இரவு அனைவரும் தூங்கியபோது ராஜஸ்தான் பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே வெளியே நின்ற ராஜேஷ் அந்த பெண்ணிடம் தவறாக பேசியுள்ளார். பின்னர் பெண்ணை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அந்தபெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக விமானத்தில் பயணம் செய்தவர்கள் அவரை பிடித்துள்ளனர். இதனையடுத்து மும்பை வந்ததும் ராஜேஷ் குமாரை பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். ராஜேஷ் குமாரை கைது செய்த அதிகாரிகள் கோர்ட்டில் ஒப்படைத்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.