தமிழ் புத்தாண்டில் இணையும் விஜய் - விக்ரம் - சூர்யா
ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே முன்னணி ஹீரோக்களின் படங்களை பண்டிகை நாட்களில் ரிலீஸ் செய்வது வழக்கம்.
தற்போது வரப்போகும் தமிழ் புத்தாண்டு ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் வரும் ஏப்ரல் 14ம் திகதி விஜய் நடிக்கும் ‘கத்தி’, ஷங்கர் படைப்பில் உருவாகும் ‘ஐ’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ திரைப்படங்களின் ஃபஸ்ட் லுக் வெளிவர உள்ளது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும சமந்தா நடிப்பில் உருவாகும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத்.
கோடையில் வெளியிட திட்டமிட்டிருக்கும் ஷங்கரின் படைப்பான ‘ஐ’ திரைப்படம் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளது.
இதில் விக்ரம், எமிஜாக்சன் மற்றும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லிங்குசாமி இயக்கி சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்கும் தமிழ் புத்தாண்டு நாளில் வெளிவர உள்ளது.
இது மட்டுமின்றி அஜித்தின் 55 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் தமிழ்புத்தாண்டு நாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: