Header Ads

சேரன் மகள் காதல் விவகாரம்: கவிஞர் சல்மா பாய்ச்சல்

சினிமாவில் காதல் காட்சிகளை காட்டும் இயக்குனர் சேரன் நிஜ வாழ்க்கையில் இதற்கு கொந்தளிப்பதேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கவிஞர் சல்மா.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்விக் குழுமத்தின் சார்பில் நடந்த படிக்கற்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதுதான் சல்மா இப்படி தனது மனக் குமுறலை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் கல்வியும், வாழ்க்கையும் என்ற தலைப்பில் சல்மா பேசினார். அவரது பேச்சிலிருந்து.

உங்களைப்போன்ற மாணவர்கள் தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். கல்வி இருந்தால் வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கிடைக்கும் கல்வி என்னைப் போன்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே நிஜம்

நான் பிறந்த இஸ்லாமிய சமூகத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. பையன்களை 12 வகுப்போடு நிறுத்திவிடுகிறார்கள் என்றால் பெண் பிள்ளைகளை 13, 14 வயதிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.

நான் 8வது படிக்கும் போது 13 வயதிலேயே என் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார்கள். நான் படிக்கும் காலத்தில் தூங்கச்செல்லும் போது ஒரு நாள் மருத்துவராக வேண்டும் என்றும், மறுநாள் பொறியாளராக வேண்டும் என்றும், அதற்கடுத்த நாள் எழுத்தாளராக வேண்டும் என்று கனவு காண்பேன்.

ஆனால், எதுவுமே நடக்காமல் எனது கனவுகள் கருகிவிட்டன. நான் கடைசியில் கவிஞராகவிட்டேன். கல்வி குறித்த விழிப்புணர்வு இன்று பெற்றோர்களுக்கு அதிகம் வந்துள்ளது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் சினிமாவில் காதல் காட்சிகளை காட்டுகிறார்கள். ஒரு இயக்குனர் சமீபத்தில் தன் மகள் ஒருவனை காதலித்துவிட்டாள் என அவளை மீட்க போராடினார். இதே இயக்குனர் தான் சினிமாவில் காதல் காட்சிகளை வைத்தார்.

அடுத்தவர் பிள்ளை எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என சினிமா எடுத்தவர்கள் தன் பிள்ளைக்கு என வரும் போது துடிக்கிறார்கள். சினிமா மூலம் சமூகத்தை சீரழிக்கிறார்கள்.

இந்த மாணவ பருவத்தில் நாம் எதை நோக்கி நடைபோட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை நோக்கி திட்டமிட வேண்டும் அதற்கான பருவம் இதுதான்.

கல்வி கற்றவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்புதான். குஜராத் மாநிலம் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள் உள்ள மாநிலம். குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டபோது பணக்காரர்கள், தொழிலதிபர்கள் சரிந்து போனார்கள். ஆனால் கல்வியாளர்கள் மட்டும் தான் தங்களது பழைய நிலைக்கு திரும்பினார்கள். காரணம் கற்றவர்களுக்கு எங்கு சென்றாலும் மதிப்பு இருப்பதால்தான்.

அதேபோல் நாட்டில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் அதனை உணர்ந்து பெண்களை பாதுகாக்க, சமஉரிமை தர வாழ்க்கையில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.