Header Ads

எந்த நடிகை எங்க இருக்கான்னு கேளுங்க... கரெக்ட்டா சொல்லுவார் : சரத்குமாரின் மானத்தை பிரஸ்மீட்டில் பறக்க விட்ட ராதிகா !

பொதுவாக ஒரு பிரஸ்மீட் என்றால் அங்கே சீரியஸாக படத்தைப் பற்றிப் பேசுவார்கள். நிருபர்களும் சிக்கலான கேள்விகளைக் கேட்டு வந்திருக்கும் பிலிம் ஸ்டார்களை திணறடிப்பார்கள்.

ஆனால் இப்படி எந்த வழக்கமான நடைமுறைகளும் இல்லாமல் கலககலப்பாக நடந்தது புலிவால் படத்தின் பிரஸ்மீட்.

அதிலும் சரத்குமாரும், ராதிகாவும் பேசியபோது அங்கே ஒரு மினி காமெடி ஷோவே நடந்து முடிந்தது போல கலாய்த்தல் காட்சிகள் நிரம்பி வழிந்தன.

பிரஸ்மீட்டில் பேசிய சரத்குமார் “இந்தப்படத்தோட பாடல்களை எனக்கு போட்டுக்காட்டினப்போ நல்லா இருந்துச்சு. ஆனாலும் எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன வருத்தம். ஏன்னா நான் நல்லா பாடுவேன். இந்தப்படத்துல நான் பாடுறேன்னு சொல்லியும் எனக்கு பாடுறதுக்கு வாய்ப்பு குடுக்கல.

இந்தப் படத்துல விமல், பிரசன்னா, சூரி, தம்பி ராமையா எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க, அவங்களை எல்லாரையும் நான் பார்த்துக்கிட்டிருக்கேன். அவங்களோட படங்களை ரசிக்கிறேன்.

தம்பி ராமையா இந்த பிரஸ்மீட்டுக்கு வரல. அவங்க கூட ஒரு லேடி நடிச்சாங்க அவங்க இங்க வரவேயில்லை. ஏன்னு எனக்குத் தெரியல. அதைப்பத்தி எனக்குத் தெரியாது. ஏன்னா நான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்தே ஹீரோயினை திரும்பி கூட பார்த்தது கெடையாது. படம் ரிலீசாகும் போதுதான் இவங்க தான் ஹீரோயினா நடிச்சாங்களான்னு பார்ப்பேன்.

என்று சரத்குமார் சிரித்துக் கொண்டே சொல்ல... அதைக் கேட்ட அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா வேகமாக மேடைக்கு வந்தார்.

வந்தவர் சரத்குமாரின் மானத்தை காற்றில் பறக்க விடும் வேலைகளை ஆரம்பித்தார். 

“நான் நடிக்க வந்து புதுசுல எந்த நடிகையை காண்டாக்ட் பண்ணனும்னாலும் முதல்ல சரத்சாரைத் தான் காண்டாக்ட் பண்ணுவேன். ஏன்னா அவருக்குத் தான் எந்த நடிகை எங்க இருக்காங்கங்கிற விஷயம் கரெக்ட்டா தெரியும்.

சரத்சார்கிட்ட அந்த நடிகை எங்க இருக்காங்க?ன்னு கேட்டா இப்போதான் மும்பை ப்ளைட்ல ஏறியிருக்காங்கன்னு அவங்க நம்பர் இதுன்னு கடகடன்னு போன் நம்பரை ஒப்பிப்பார். 

ஏன்னா அவருக்கு மும்பை தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதேமாதிரி இன்னொரு ஹீரோயின் பேரைச் சொல்லி அவங்க எங்கன்னு கேட்டா அவங்க தானே?, அவங்க மேட்டுப்பாளையத்துல ஷூட்டிங்ல இருக்காங்க, அவங்க நம்பர் இதுன்னு நம்பரைச் சொல்லுவார்.

அது எந்தப்படத்தோட ஷூட்டிங், டைரக்டர் யாரு? இப்படி எந்த விஷயமும் தெரியாது. ஆனா நடிகை மேட்டுப்பாளையத்துல இருக்காங்கன்னு மட்டும் கரெக்ட்டா சொல்லுவாரு.

அந்த வகையில நல்ல ஜெனரல்நாலெட்ஜ் உள்ள ப்ரெண்டுதான் என்னோட கணவர் என்று கலாய்த்து விட்டுப் போனார் ராதிகா.

உடனே அவங்க சொல்றது நூத்துக்கு நூறூ உண்மைதான். அதுக்காக நான் ஒன்னும் பொம்பளை பொறுக்கி கிடையாது. ஆனா பெண்களுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றார்.

அப்போது சார் எந்த நடிகை எங்க இருக்காங்கன்னு கேட்டா கரெக்ட்டா சொல்லிடுறீங்க, ஆனா ஒரு ஹீரோவைப் பத்திக் கேட்டா மட்டும் எதுவும் தெரியாதுன்னு சொல்றீங்களே? அதெப்படி என்று காமெடி நடிகர் சூரி கேட்க,  கூடவே ராதிகாவும் கமல் சார் எங்க இருக்காருன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லுவார் என்றார்.

அதற்கு பதிலளித்த சரத் கமல் சார் எங்க இருக்காருன்னு உந்த உலகத்துக்கே தெரியும். அதே ஆழ்வார்ப்பேட்டை ஆபீஸ்ல தான் இருக்கார். அதை ஏன் நான் தெரிஞ்சு வெச்சிருக்கணும். நடிகைகள் எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு வெச்சிருக்கிறதுனால தான் இன்னைக்கு நான் நடிகர் சங்கத் தலைவராகவும் இருக்கேன் என்று சொன்னாரே பார்க்கலாம்.

இப்படியே புலிவால் படத்தின் பிரஸ்மீட்டில் ஒரு உச்சக்கட்ட காமெடி ஷோவை எந்த ஒரு விளம்பர இடைவெளியும் இல்லாமலேயே நடத்தி விட்டுப் போனார் சரத்குமார்.

No comments:

Powered by Blogger.